Total Pageviews

Sunday, October 28, 2012

HR Executive - Training Program - Week end Training Program




HR Executive - Training Program - Week end Training Program

This course is designed for MBA (HR) students and other graduates who are willing to become HR Executive in Software companies, BPO, ITES and other Core Industries companies.

Duration: 3 Months. - Saturday and Sunday every week.

Timing: Theory: 10.00 am to 12.00 Noon on Saturday and Sunday

Practical Session: 12.00 Noon to 5.00 pm on Saturday and Sunday.

Cost: Rs.6,000/-

Course commences on : 15th Nov 2012

Trainer: 
N.Sugavanam, M.A., F.I.I.I, MBA,  
CEO, SUGA Consulting Services
Email:  ceo@sugaconsulting.in 
www.sugaconsulting.in
www.suga-consulting-services.com 

Phone: Vodafone: 91762-44989, Landline: 044-2498-4149

For further details contact:

SUGA HR Training Institute,
SUGA Employment Services,
(A division of SUGA Consulting Services)
Office No.26, TNHB Complex,
180, Luz Church Road, Mylapore, Chennai - 600004

Landmark: Near Luz Signal, Luz Pillaiyar Koil, behind 'MAX' Show Room

Friday, October 26, 2012

தினம் ஒரு மரம் - நாள் 44 - வாழை மரம் நமது தெய்வம்,,,



தினம் ஒரு மரம் - நாள் 44 - 

வாழை மரம் நமது தெய்வம்,,,


திரு சுரேந்திரன் (ஜித்தா, சௌதி அரேபியா) வாழை மரக்கன்றை நட்டார்.

முதல் முறையாக கடல்தாண்டி பசுமைவிடியலின் தினம் ஒரு மரம் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது !

சௌதி அரேபியாவில் வசிக்கும் நண்பர் அலெக்ஸ் https://www.facebook.com/alex.dominic.37 அவர்கள் அதிக ஆர்வத்துடன் இதில் நாங்களும் கலந்துகொள்கிறோம் , என தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனே செயலிலும் இறங்கி விட்டார். அந்த பாலைவன பிரதேசத்தில் மரம் நடுவது எத்தகைய சிரமம் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். திரு.அலெக்ஸ் அவர்களின் நண்பர் திரு.சுரேந்திரன் பலவேறு இடங்களில் இருந்து சிறிது சிறிதாக மண் சேகரித்து தங்களது வீட்டின் அருகில் சிறு தோட்டம் போட்டிருக்கிறார். கருவேப்பிலை, முருங்கை, சில மூலிகை செடிகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

இத்திட்டத்திற்காக மரக்கன்று வாங்க தேடி அலைந்தும் கிடைத்தபாடில்லை...இறுதியாகவாழைக்கன்று ஒன்றை நட்டு ஆசையாக போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் அங்கேயுள்ள நண்பர்கள் சிலரும் நாங்களும் மரம் நட்டு அனுப்புகிறோம் என்று சொன்னதை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம்.

பொதுவாக வாழை ஒருமுறை தார் போட்டதும் கீழே சில சின்ன வாழைகன்றுகள் அதன் கிழங்கில் இருந்து முளைத்து வரும். அதே போல இந்த ஒரு கன்று இன்னும் பல கன்றுகளுக்கு ஆரம்பமாக இருக்கும் என்று பசுமை விடியல் நம்புகிறது.

திரு.அலெக்ஸ், திரு.சுரேந்திரன் மற்றும் நண்பர்களை பசுமைவிடியல் வாழ்த்தி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Sunday, October 21, 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!



சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

யுத்தத்துக்கு தேவையான அளவு ஈட்டி, கேடயம், கத்தி நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை வெளியிட்டது யார்? பேரீச்சம்பழ வியாபாரிதான் அரசே..!



யுத்தத்துக்கு தேவையான அளவு ஈட்டி, கேடயம், கத்தி
நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை வெளியிட்டது யார்?

பேரீச்சம்பழ வியாபாரிதான் அரசே..!

Thursday, October 18, 2012

Tamil Kavithai


சுஜாதா... சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்' என்ற நிறுவனத்தில் நண்பர் ஆண்டோ பீட்டர், திருக்குறள் முழுவதையும் நான்கு உரைகளுடன் குறுந்தகட்டில் கொடுத்திருக்கிறார்



சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்' என்ற நிறுவனத்தில் நண்பர் ஆண்டோ பீட்டர், திருக்குறள் முழுவதையும் நான்கு உரைகளுடன் குறுந்தகட்டில் கொடுத்திருக்கிறார் (மு. வரதராசனார், பரிமேலழகர், மணக்குடவர், ஜி.யு. போப் உரைகளுடன்).

அதேபோல், குழந்தைப் பாடல்கள் சிலவற்றையும் அனிமேஷன் செய்து, சங்கீதத்துடன் பாடிக் குறுந்தகடாகக் கொடுத்திருக்கிறார். ஆர்வத்துடன் இவர் பதிப்பிக்கும் குறுந்தகடுகளின் வியாபாரம்தான் சரியாக இல்லை என்றார். அடக்க விலைகூடக் கிடைக்கவில்லை என்றார்.

வெறும் ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எப்படி வியாபாரம் நடத்த முடியும்? தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? யாரும் தமிழில் பாப்பா பாடல்களைச் சொல்லிக் கொடுக்க ஏன் முன்வருவதில்லை?

இன்னும் எத்தனை நாளைக்கு 'ரிங்கா ரிங்கா'வையும் 'ஹிக்கரி டிக்கரி டாக்'கையும் ராணியைப் பார்க்கச் சென்ற பூனையையும் பாடிக் கொண்டிருப்போம்?

தமிழில் எத்தனை நல்ல பாடல்கள் உள்ளன? அவற்றைக் கற்றுக்கொடுத் தால், அந்தப் பள்ளிகளுக்குப் பெற்றோர் தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்களாம். இதைவிட ஆச்சரியம்... பால் மறவாத கைக்குழந்தைக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் என்று பணம் பிடுங்குவது.

அதாவது, தாய்மொழியில் இருந் தால் பரவாயில்லை. மத்தியப் பிரதேஷ், சத்தீஸ்கர் மாநிலங்களில் கிராமங்களைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளிகளில் இந்தி மூலம் கணிப் பொறியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள்.

'ஷிக்ஷா' என்னும் திட்டத்தின்கீழ் தாய்மொழி இந்தி மட்டும் தெரிந்த கிராமத்துக் குழந்தைகள் இயல்பாகக் கணிப்பொறியைக் கையாள்கின்றனவாம்!

மெள்ள இந்த நிலை இந்திய மொழிகளில் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு 'யூனிகோட்' என்னும் ஒருமித்தக் குறியீட்டு முறை முக்கியம்.



மதர் டங்க்…!



சூரியன்னா என்னம்மா…?

சன் குட்டி….

பலாச்சுளைன்னா என்னம்மா?

ஜாக்ப்ரூட் செல்லம்…

எதிர்பார்க்கிறதுன்னா என்னம்மா..?

எக்ஸ்பெக்ட் பண்றது…!
-
ஆராரிரோ பாட்டுன்னா?

லல்லபிடா…

அப்போ…தாய்மொழின்னா..?

மதர் டங்க்…!