Total Pageviews

Sunday, June 17, 2012

அகரம் பவுண்டேஷன் - உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் - சூர்யா




தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ்

{ கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை.

-திருக்குறள் 400

விளக்கம்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. மற்றப் பொருட் செல்வங்கள் எல்லாம் அழியக் கூடியவை யாகையால் சிறந்தவை அல்ல.}

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல.

வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.

"வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்."

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் விவரம்


அகரம் பவுண்டேஷன்
17/8 கிருஷ்ணா தெரு,
1,கணபதி அபார்ட்மெண்டஸ்,
தி.நகர், சென்னை-600 017
தொலைபேசி (044 )4350 6361
அலை பேசி - 9841091000.
மின்னஞ்சல் : info@agaram.in
இணையதளம் -http://agaram.in/

பிறர் கொடுக்க நினைப்பதை நலிவடைந்தவர்களிடம் கொண்டுசேர்ப்பது நம் கடமை ஆகும்

இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?

No comments:

Post a Comment