Total Pageviews

Monday, April 30, 2012

ஆடாதொடை - அருமருந்து




ஆடாதொடை தமிழக்ம் முழுவதும் காணப்படும் ஒரு குறுஞ்செடியினம்.நீண்ட ஈட்டி வடிவ இலைகளையும்,வெள்ளை நிறப்பூக்களையும் உடைய செடி.சளி,இருமல்,வயிற்றுபூச்சிகளை போக்குவதில் அருமருந்து இது.
1.இலைச்சாற்றை சில துளிகள் தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்தவாந்தி,மூச்சுத்திணறல்,இரத்தம் கலந்த சளி குணமாகும்.
2.இலைச்சாற்றை எருமைப்பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர சீதபேதி,இரத்தபேதி குணமாகும்.
3.இதன் 10 இலைகள் எடுத்து நீரில் போட்டு காய்ச்சி தேனுடன் கலந்து 40 நாட்கள் காலை,மாலை சாப்பிட்டு வர என்புருக்கி,சளிசுரம்,விலாவலி ஆகியன குணமாகும்.
4.ஆடாதொடை வேருடன்,கண்டங்கத்திரி வேர் கலந்து இடித்து அதில் 1கிராம் வீதம் தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி,ஈளை,இருமல்.எலும்புருக்கி,ஆகியன தீரும்.
5,இதன் உலர்ந்த இலைகளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைபிடிக்க மூச்சுத்திணறல் தீரும்.
6,இதனுடன் அக்காரகாரம்,சித்தரத்தை,இலவங்கம்,ஏலம்,சர்க்கரை,தேன் கலந்து செய்யப்படும் ஆடாதொடை மணப்பாகு என்புருக்கி,மார்ச்சளி,இருமல்,ஃபுளுரசி,ஆஸ்துமா,நிமோனியா ஆகியவை குணமாகும்.குரல் இனிமை கிடைக்கும்.
7.ஆடாதொடையுடன்கோரைக்கிழங்கு,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,துளசி,சீந்தில்,கஞ்சாங்கோரை,பேய்ப்புடலை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் அனைத்து சுரங்களுக்கும் குணமளிக்கக் கூடியது.
8.கருவுற்ற பெண்கள் இதன் வேரில் கஷாயம் வைத்து கடைசி மாதத்தில் அருந்தி வர சுகப்பிரசவம் உண்டாகும்
 

No comments:

Post a Comment